Perambalur: Mysterious individuals broke the windows of the court!

பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் எளம்பலூர் சாலையில் இயங்கி வருகிறது. அதன் மேற்கு பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை மர்ம நபர்கள் யாரோ உடைத்து சென்றுள்ளனர். மேலும், இன்று காலை நீதிமன்ற பணிகளுக்கு வந்த ஊழியர்கள் இதை பார்த்தனர். இது குறித்து பெரம்பலூர் டவுன் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்து அப்குதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்கைளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.









kaalaimalar2@gmail.com |
9003770497