perambalur near the tractor driver dares to attack on the way

பெரம்பலூர் அருகே உள்ள கொட்டரை கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியகோடி (வயது 67) . இவருக்கு சொந்தமான டிராக்டரில் ஹலோ பிளாக் கற்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் பைக்கில் வந்த அதே ஊரை சேர்ந்த சதாம்சேகர் (வயது 27) ஹார்ன் அடித்து வழி கேட்டுள்ளார். ஆனால் வழி விடவில்லை என கூறப்படுகிறது.

முந்தி சென்ற சதாம் சேகர் டிராக்டரை ஓட்டிய புண்ணியகோடியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மீண்டும் 10 பேரை அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டாராம்.

இது குறித்து புண்ணிய கோடி கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!