Perambalur: Overhead water tank at Sathanur; Minister Sivashankar laid the foundation stone and inaugurated it!

பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூரில், 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதனால், அப்பகுதியில் உள்ள சுமார் 1,500 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயனடைவார்கள். கலெக்டர் ந.மிருணாளினி, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, திமுக இளைஞரணி அமைப்பாளர் வ.சுப்பிரமணியன், ஒப்பந்ததாரர் அயனாபுரம் பாலமுருகன், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!