Perambalur: Police announce that absconding criminals who have not appeared in cases must appear in court!

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர், வ.களத்தூர் போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான குற்ற வழக்குகளின் குற்றவாளிகளான PRC.NO:37/2019 கைகளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 70/2011 U/s 294 (b),307, 323 IPC.வெண்பாவூரை சேர்ந்த ராமசாமி மகன் குணா (எ) குணசீலன் (34 @2011), PRC.NO: 5 /19 கைகளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 14/2012 U/s 399 IPC சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முள்ளுவாடியை சேர்ந்த வேலு மகன் மகாலிங்கம் (வயது 52 @ 2012), PRC.NO: 4/2019 கைகளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 31/1996 U/s 148, 307 IPC கைகளத்தூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வேலுசாமி, CC NO:38/2019 வ.களத்தூர் காவல் நிலைய குற்ற எண் 21/2013 U/s 294(b),324,353,506(ii) நெய்க்குப்பை கிழக்கு தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் கிருஷ்ணகுமார் ஆகிய 4 பேரும் மேற்படி குற்ற வழக்குகளில் நீண்ட வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பினை பார்த்துவிட்டு வரும் 18.12.2025 தேதி காலை 10.00 மணிக்கு வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகவில்லையெனில், மேற்படி குற்றவாளிகளை தலைமறைவு குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என போலீசார் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!