#Perambalur private bank manager at home, at a value of Rs 80 thousand, including 1 lac value theft

பெரம்பலூர் தனியார் வங்கி மேலாளார் வீட்டில் திருட்டு ரூ. ஒரு லட்சம் மதிப்பு திருட்டு : ரூ.80 ஆயிரம் ரொக்கம் உள்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ஜெனிபர் நகரில், மதுரையை சேர்ந்த சேதுநாராயணன். (வயது 29) தனியார் (கே.வி.பி) வங்கி மேலாளாரான இவர் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் இருந்த ரொக்கப் பணம் ரூ.80 ஆயிரம் மற்றும் டேப்லெட் உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து தனியார் வங்கி மேலாளார் சேது நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தடய அறிவியல் நிபுணர்களை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அருகே அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பூட்டிருந்த வீட்டினுள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!