Perambalur: Special Amavasya Pooja at Sangupet Sri Muthumariamman Temple: Food distribution!

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் அம்மனுக்கு காட்டப்பட்டது. பெண்கள் பொதுமக்கள் வழிபட்டனர். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் இல்லாமல் இருக்க பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். அன்னதானம் ஏற்பாடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கு பேட்டை, அன்னதான குழுவினர் முன்னின்று நடத்தி வருகின்றனர். கோயில் நிர்வாக அறங்காவலர் கண்ணபிரான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!