Perambalur, teak tree repair worker died after falling!

பெரம்பலூர்புதிய மதனகோபாலபுரம் ஆரோக்கிய நகரை சேர்ந்தவர் பீட்டர்ராஜ், இவரது வீட்டில் தேக்கு மரங்கள் உள்ளது. அதனை, பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த தங்கைய்ய (55) என்பவர் தேக்கு மரங்கள் நேராக வளர, இன்று மதியம் ஒரு மணி அளவில் மரத்தில் ஏறி கத்தியால், சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது, தங்கையா மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும், வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!