Petition to Perambalur MLA, R. Tamilselvan, seeking government declaration as Devendra Kula Velalar.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபாளையம், களரம்பட்டி, அரும்பாவூர், அ.மேட்டூர்,வெங்கலம்,தொண்டைமாந்துறை, எசனை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 500 பேர்கள் கையெழுத்துயிட்ட கோரிக்கை மனுவை, தேவேந்திர குல வேளாளர்கள் சமுதாயத்தை சார்ந்தவர்கள் பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், அவர்களது “சமூக வாழ்வியல் பெயரான தேவேந்திர குல வேளாளர்” என அரசு அறிவிக்கவும், மானுடவியல் அறிக்கையை அமல்படுத்திட வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதற்கு எம்.எல்.ஏ இரா. தமிழ்ச்செல்வன் அதிமுக கட்சி தலைமையை வலியுறுத்தவும், முதல்வருக்கும் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.