Political parties pay Garland Hounor in Perambalur on the occasion of the 52nd Remembrance Day of Anna

பேரறிஞர் அண்ணாவின் 52 நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு, பெரம்பலூரில் அதிமுக சார்பில் மாநில மீனவரணி இணைச் செயலாளர் தேவராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, மகளிரணி ராஜேஸ்வரி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதே போன்று திமுக, மதிமுக, விசிக கட்சியினர் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!