Pradosham: Special abhishekam for Nandi near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், பாலையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் ஆலயம் புதியதாக கட்டப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டல அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று. இக்கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பெருமானுக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!