Private schools can complain if they are forced to pay fees; Perambalur Collector V. Santha Information
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் நீதிமன்ற தீர்ப்பாணையின்படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டுமென தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதையும்மீறி, தனியார் பள்ளிகள் முழுக் கட்டணத்தையும் கேட்டு பெற்றோரை வற்புறுத்தினால் பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் மீது ceopsgrievance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 9786026745 தொலைபேசி எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம் எனவும், பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.