Public meeting in Perambalur on Nov 4 against imposition of Hindi: CM Stalin attends!
தி.மு.க.தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பை எதிர்த்து நவம் 4 அன்று இரவு பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில், பாலக்கரை அருகே உள்ள இடத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பார்வையிட்டார். திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், எம்.எல்.ஏக்கள் எம்.பிரபாகரன், கா.சொ.க.கண்ணன், கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.ந.பெருநற்கிள்ளி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ம.இராஜ்குமார், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தி.மதியழகன் மற்றும் ந.செல்லப்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.