பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைத்தீர்க்கும் முகாமில் தமிழ்நாடு முத்திரையர் சங்கத்தின் மாநில செயலாளார் மரு. பாஸ்கரன் தலைமையில் தமிழக முதலமைச்சருக்கு கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவின் நகலை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கொடுத்தனர் : அதில் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளதாவது:
முத்திரையர் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரியும், பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து இருந்தனர். அப்போது, மாவட்டத் தலைவர் கருப்பையா, மாவட்ட செயலாளர் பாலசண்முகம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் உடன் வந்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!