Special Area Sabha Meeting in 17th Ward of Perambalur Municipality
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டில் கவுன்சிலர் துரை.காமராஜ் தலைமையில் இன்று மாலை, நகராட்சி சிறப்பு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
இதில் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், கலந்து கொண்டு வார்டு பிரச்சினைகள் குறித்தும், வார்டுக்கு தமிழக அரசு வழங்கிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். பின்னர், ஆலோசனைகள் பெறப்பட்டது.
மேலும், வார்டில் குடிநீர் பிரச்சினை உள்ளதை, பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து, அதை உடனடியாக தீர்க்கப்படும் என நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் காமராஜ் ஆகியோர் உறுதி அளித்தனர். 17 வார்டு பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.