Special loan camp for the disabled to start a business in Perambalur!

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையிலான வங்கிக் கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த லோன் மேளாவில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள 150 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அதில் 120 மனுக்கள் மீது வங்கிகளுக்கு பரிந்துரைத்து உடனடியாக லோன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வங்கி மேலாளர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!