Special Petition Camp at Perambalur District Police Office!
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைப்பெற்றது. முகாமில் ஏ.எஸ்.பிக்கள், ஆரோக்கியபிரகாசம் பாண்டியன் மற்றும் மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி தங்கவேல் மற்றும் பெரம்பலூர் டி.எஸ்.பி. சஞ்சீவ்குமார் ஆகியோர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டார்கள். இந்த மனு முகாமில் 25 மனுக்கள் பெற்றப்பட்டும் மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக எஸ்.பி ச.மணி தெரிவித்ததாவது:
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைப்பெறும், பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.