Tamil Language Law Week will be celebrated from Dec. 23 to 29: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளினை நினைவு கூறும் வகையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் டிச.23.முதல் டிச. 29 வரை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் ஆட்சி மொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகள் ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் கொண்டாடப்பட உள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை மாணவர்கள் ஆகியோரை சமூக இடைவெளியோடு பங்கேற்கச் செய்து விழா நடத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.