Tanker truck collides with two-wheeler near Perambalur; Petrol punk employee killed!
பெரம்பலூர்- அரியலூர் சாலையில் குன்னம் கிராமத்தில் டூவீலர் மீது-ஆவின் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில், டயருக்கு அடியில் சிக்கிய சடைக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகனும் பெட்ரோல் பங்க் ஊழியருமான ராஜ்குமார் (வயது 26), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தகவறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி ஓட்டுனர் நல்லதம்பியை கைது செய்தனர், பலியான ராஜ்குமார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.