Teacher’s Day is celebrated in all schools today
இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சமூகக் கடமை உள்ளது.
மாணவர்களின் ஏற்றத்திற்கான ஏணியாக திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மலர் கொத்து கொடுத்து மரியாதை செய்கின்றனர்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து , இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக இன்று (செப்.5 ) கொண்டாடப்படுகிறது.