The lorry tube bursting in Perambalur was blasting fire || பெரம்பலூரில் ஆழ்குழாய் அமைத்த லாரி டியூப் வெடித்து தீவிபத்து

பெரம்பலூரில் இரவு பகலாக நிறுத்தாமல் தொடர்ந்து ஆழ்குழாய் அமைத்ததால் கம்பரசர் டியூப் வெடித்து தீவிபத்து

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் தொடர்ந்து இரவு பகலாக போர்வெல் லாரி மூலம் போர்வெல் அமைத்து வந்தால் லாரியில் இருந்து பூமியை துளைக்கும் ரிக்கிற்கு வரும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டதில், போர்வெல் லாரியின் பின்புறம் தீப்பற்றியது. தீ லாரி தீப்பற்றி எரியத் துவங்கியது. இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைத்து தீ விபத்தை தவிர்த்தனர்.

விபத்திற்கான காரணம் நேற்று முழுவதும் 473 அடி ஆழம் ஒரு ஆழ்குழாய் தோண்டிவிட்டு, இடைவிடாமல் அதன் அருகிலேயே மற்றொரு போர்வெல் சுமார் 300 அடிக்கு மேல் தோண்டப்பட்டு வந்துள்ளதே காரணம் என தெரிய வந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!