Two more 108 ambulances for Perambalur district: Perambalur Collector V. Santha started
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தற்போதைய கொரோனா தடுப்பு நடவடிக்கயைகவும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திடும் பொருட்டு கூடுதலான வாகனங்களை அனைத்து மாவட்டத்திற்கும் வழங்கினார்
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. வாகனத்தில் அவசர சிகச்சை பிரிவிற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களான, செயற்கை சுவாச கருவிகள் வெண்டிலேட்டர், ஆக்ஸிஸன் வசதிகள் ஆகிய அனைத்து வசதிகள் கொண்ட வாகனமும் மற்றொன்று பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வாகனமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான உயர் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது தொடக்கி கலெக்டர் வே.சாந்தா தெரிவித்தர்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.கீதாராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.