Varakupadi panchayat Vice President elected without competition!

பெரம்பலூர் மாவட்டம், வரகுபாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்த செல்வம் மனைவி சசிகலா (30) தனக்கு மக்கள் நல பணியாளர் பணி கிடைத்தால், அந்த பணிக்கு சென்று விட்டார். மேலும், துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வரகுபாடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது. இப்பதவிக்கு 1வது வார்டு உறுப்பினரான மருதமுத்து மகன் செந்தில்குமார்(42) என்பவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட வேறுயாரும் மனு தாக்கல் செய்யாததால் செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

விளம்பரங்கள்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!