Widespread rain in Perambalur district today! Happy farmers!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகலில், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, அனுக்கூர், எசனை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது.

இதனால், ஆடிப்பட்டத்தை எதிர்நோக்கி இருக்கும், உழவர்கள், மானாவாரி பயிர்களான பருத்தி மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட தானியம் மற்றும் பருப்பு வகை பயிர்களை சாகுபடி செய்ய தயராகி வருகின்றனர். மேலும், பசுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கால்நடை வளர்ப்போர்களும், பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!