admk-thiruvalandurai பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவையூர் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் இரா.தமிழ்செல்வன், எறையூர், சின்னாறு, வி.களத்தூர், திருவாலந்துறை, அயன்பேரையூர், இனாம் அகரம், பசும்பலூர், பிம்பலூர், மரவநத்தம், உட்பட 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக நடந்து சென்றும் பொது மக்கள் மற்றும் முதியவர்களை வணங்கியும் கும்பிட்டும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கி பேசிய வேட்பாளர் தமிழ்ச்செல்வன், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் பொது மக்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடனே செய்து தருவதாக உறுதியளித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது கட்சி தொண்டர்கள், ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதி பொது மக்கள் வெடி வெடித்தும், சால்வை அணிவித்தும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!