பெரம்பலூர் : குன்னம் அருகே காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் காயத்ரி(22). பெற்றோருடன் வசித்து வந்த இவர் கடந்த 2ந்தேதி காலை 8.30 மணியளவில் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனைத்தொடர்ந்து காணாமல் போன காயத்ரியை அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைவில்லை மங்களமேடு
காவல் நிலையத்தில் காயத்ரியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய்
பூவாயி(42) அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.ஐ.,கதிரேசன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!