குன்னம் தொகுதி வேட்பாளர் த.துரைராஜ் ஆலத்தூர் ஒன்றியம் தெரணி கிராமத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் தெரணி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளா துரைராஜ், திமுகவின் தேர்தலை அறிக்கையை வாக்காளர் தெரிவித்து வாக்குகளை சேகரித்தார். சுத்தமான குடிநீர், அடிப்படை வசதிகளை பெற்றுத் தருவதாகவும், கல்வி வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம், அளித்து தொகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதாக உறுதி அளித்தார். பின்னர், காரை கொளக்காநத்தம், கூடலூர், இலுப்பைக்குடி சாத்தனூர், உள்ளிட்ட சா.குடிக்காடு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்குகளை கட்சியினருடன் சென்று சேகரித்தார்.
அப்போது மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.