Private companies selling land survey maps, to be sealed: Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறையில் பராமரிக்கப்படும் மாவட்ட வரைபடங்கள், வட்ட வரைபடங்கள் மற்றும் கிராம வரைபடங்கள் சென்னை, மத்திய நில அளவை அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு அவற்றை விற்பணை செய்யும் அதிகாரப்பூர்வ உரிமை நில அளவை மற்றும் நில வரித் திட்ட துறைக்கு மட்டுமே உள்ளது. மேற்கண்ட அரசு ஆவணங்களை இம்மாவட்டத்தில் சில தனியார் நிறுவனங்களால் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வரப்படுகின்றன. இது போன்று நிகழ்வுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய நிறுவனத்திடமிருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்வதுடன் நிறுவனமும் சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!