118 people confirmed infected with the virus in a single day in Perambalur district today: 4 killed!
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 9 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 118 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தகவல்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,926 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 1,725 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், இதுவரை 113 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.