75th Independence Day Celebration at Almighty Vidyalaya Public School!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில், இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா, தாளாளர் ஆ.ராம்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. நல்லாசிரியர் விருது பெற்ற தமிழாசிரியர் ராஜேந்திரன் தேசியக் கொடியினை மரியாதை செலுத்தினார். பள்ளி முதன்மை செயலாளர் செந்தில்குமார், முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர்கள் ஹேமா, சாரதா, சந்திரோதயம் ஆகியோர் சுதந்திர தின சிறப்புரை நிகழ்த்தினர். சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து இருபால் ஆசிரியர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!