983 for women’s self-help groups Rs. 36.03 crore loan and welfare assistance provided by Minister Sivasankar.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு, 983 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 12,834 உறுப்பினர்களுக்கு ரூ.36.02 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாதுரை(பெரம்பலூர்), கே.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.