Aadhaar number to connect to the bank account of military pensioners – The collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் செய்துள்ள அறிவிப்பு:
மத்திய அரசின் இராணுவ ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்குடன் ஆதார் அட்டை எண்ணினை இணைக்கவேண்டும் என புதுடெல்லி இராணுவ தலைமையிடத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த இராணுவ ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் கைம்பெண்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணினை தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04329 – 221011 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்,