All India 20th Veterinary Census Work Start on Oct.1st : Perambalur Collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ளள தகவல் :
அகில இந்திய 20வது கால்நடை கணக்கெடுப்புப் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற 01.10.2018 முதல் தொடங்கி மூன்று மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
இக்கணக்கெடுப்புப் பணியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை கணக்கெடுப்பு அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்பொழுது தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் (பசு, எருமை, ஆடுகள், குதிரைகள், கோவேரிக் கழுதைகள், கழுதைகள், பன்றிகள், முயல்கள், நாய்கள் மற்றும் கோழியினங்கள், வாத்துகள்) மீன்குட்டை மற்றும் அதனைச் சார்ந்த உபகரணங்கள், விவசாயம் சார்ந்த உபகரணங்கள் ஆகிய விவரங்களை வழங்கி இப்பணி சிறந்த முறையில் செயல்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.