As the address asks, the gold chain flush to the grandmother!
பெரம்பலூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை மருவத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி செல்லம்மா (65). கணவர் இறந்துவிட்டதால், செல்லம்மா தனியாக வசித்து வந்தார்.
இவர், நெடுவாசல் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் முகவரி கேட்பதைப் போல, மூதாட்டி அருகே சென்று கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து செல்லம்மா கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிலு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.