Boy dies after drowning near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், சில்லக்குடி கிராமத்தை சேர்ந்த செம்பு மகன் வசந்த் (7) செம்பு. அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று மதியம் 12.30 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த சிறுவர்களுடன், நடராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள குட்டையில் குளித்தான். நீச்சல் தெரியாததால், ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கி இறந்தான். இது குறித்து வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.