Breaking the glass of the government bus that dropped off passengers at the bus stand: Police investigation!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள துங்கபுரம் பஸ் ஸ்டாண்டில் இன்று மாலை வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் துங்கப்புரம் பஸ் ஸ்டாண்டில், பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்லால் தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்து, அந்த பேருந்தின் ஓட்டுனர் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணாடி உடைத்தவரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!