Car – bike collision near Perambalur : Deputy Tahsildar’s father killed
பெரம்பலூர் அருகே இன்று மாலை காரும் , இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் தாசில்தாரின் தந்தை பலியானர்.
பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 55). தனியார் கல்வி நிறுவனத்தில் சமையலாராக பணிபுரிந்து வருகிறார். இன்று மாலை வேலை முடிந்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக வந்து மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில வந்த போது வி.களத்தூரில் இருந்து திருச்சி சென்ற டாடா சுமோ கார் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரெங்கராஜ் பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் ஓட்டுனரான பசும்பலூரர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்த் (வயது 24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான ரெங்கராஜுன் மகன் துரைராஜ் பெரம்பலூர் வட்டாசியர் அலுவலகத்தில் தலையிடத்து துணைவட்டாசியளராக பணிபுரிந்து வருகிறார்.