Communists campaign in Perambalur district explaining the demands!
வேளாண்மை, மின்சாரம் மற்றும் தொழிலாளர்கள் நல திருத்த சட்டம், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில், சாதிவாரியாக வேலையும் சம்பளமும் வழங்கும் உத்தரவு இவைகளை திரும்ப பெற வலியுறுத்தி வரும் ஆக.9 அன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. அதனையொட்டி, சிஐடியு தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்டோக்கள் மூலம் நான்கு நாட்கள் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களில் பிரச்சாரம் நடத்தினர்.
விவசாயிகள் சங்கம் என்.செல்லதுரை, கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், விதொச பி.ரமேஷ், சிஐடியு எஸ்.அகஸ்டின், மாதர் சங்கம் எ.கலையரசி, வேப்பந்தட்டை கோகுலகிருஷ்ணன், பாரதி, குன்னம் செல்லமுத்து, அறுமுகம், ஜெய்சங்கா;, இளங்கோவன், சிஐடியு சண்முகம், ரெங்கநாதன், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.