Cucumber cultivated in greenhouses: Perambalur Collector visited

பெரம்பலூர் மாவட்ட, வேளாண்த்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் பார்வையிட்டார்.

இன்று செஞ்சேரியில் பெரியசாமி என்பவரது 1.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்ணை, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் குரும்பலூர் மேட்டாங்காட்டில் குமார் என்பவரது வயலில் பாதுகாப்பட்ட முறையில் சாகுபடி செய்தல் இனத்தின் கீழ் ரூ.8,90,000 அரசு மானிய உதவியுடன் ரூ.19,21,416 மதிப்பில் சுமார; 2,000 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் மூலமாக பயிர் செய்யப்பட்டு வரும் வெள்ளரி சாகுபடி உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்த்துறையினர் பலர் உடன் இருந்னர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!