Cyber Crime Finds 131 Missing Cell Phones: Police SP Mani handed over to the rightful owners
பெரம்பலூர் மாவட்டத்தில், களவு, மற்றும் கவனக்குறைவால் தொலைத்த 131 பேர், தனது செல்போன்களை ஐ.ஈ.எம்.ஐ எண்ணை வைத்து கண்டுபிடித்து கொடுக்க வேண்டு போலீசாரிடம் மனு கொடுத்தனர். அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த போன்களை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் கண்டுபிடித்தனர். 131 பேர்களை பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு போலீஸ் எஸ்.பி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். தொலைத்த செல்போன்களை புகார்தாரர்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். ஏ.டி.எஸ்.பி பாண்டியன், டி.எஸ்ஃபி ஆரோக்கிய பிரகாசம் உள்ளிட்ட சைபர் க்ரைம் போலீசார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.