Death came into the town in search of deer to water at labbaikudikadu near in Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
பெரம்பலூர் மாவட்ட காப்பு காடுகளில் மான்கள் வசித்து வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மனிதர்கள் மட்டுமல்லாது வன விலங்களும் தண்ணீரை தேடி அலைந்து திரிகின்றன.
இன்று அதிகாலை தண்ணீர் தேடி லப்பைக்குடிகாட்டில் ஒன்றரை வயது மதிக்கதக்க புள்ளிமான் ஒன்று புகுந்தது. அதனை அங்குள்ள தெருநாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறியது. இதில் புள்ளி மான் காயம் அடைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மானைமீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை வந்து சேர்வதில் நீண்ட நேரம் காலதாமதம் ஆனதால் காயமடைந்த புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது. மானை வனத்துறையினர், கால்நடைத்துறையினர் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.