Deepavali Festival: New Temporary Fireworks Retail: Application Deadline Extension: Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்தில், எதிர்வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம், வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் 30.09.2021-க்குள் விண்ணப்பித்துக் கொள்ள தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் 22.10.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய உhpமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மைங்களில் இணையதளம் வாயிலாக 22.10.2021-க்குள் விண்ணப்பிக்குமாறும், பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!