Dharna with children in Tirupur Collector’s office demanding a recovering husband
திருப்பூர்: திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளி மனோகர் பனியன் தொழிலாளி இவரது மனைவி பிரித்தி இவர்களுக்கு ஒன்னறை வயது மற்றும் ஆறு வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே கடந்த 4- ந் தேதி வீட்டில் இருந்த மனோகரை விசாரனைக்கு அழைத்து வர காவல் நிலைய ஆய்வாளர் தென்னரசு கூறியதாக திருப்பூர் தெற்கு போலீசார் அழைத்து சென்ற நிலையில் மறு நாள் காலை வரை மனோகர் வீடு திரும்பாத்தால், காவல் நிலையம் சென்ற பிரித்தி காவல் ஆய்வாளர் தென்னரசிடம் கேட்டபோது மாலை வீடுதிரும்புவார் என்று கூறிய நிலையைல் அதன் பின் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தரணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை கணவர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தரணாவில் ஈடுபட்ட பெண் கலைந்து சென்றார்.