Dipper lorry collided near Perambalur, Larry Driver kills

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40), லாரி டிரைவரான இவர் நேற்று, பெரம்பலூர் – ஆத்தூர் இருந்து கேனேரிப்பாளையம் புறவழிச் சாலை சந்திப்பு அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது துறையூர் பகுதியில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற தனியாருக்கு சொந்தமான டிப்பர் லாரி இவர் மீது மோதியது.

மோதியதில் லாரியில் சிக்கி சக்திவேல் பலத்த காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சையின் போது சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலம்பாடியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!