DMK candidate’s husband stabs near Perambalur

பெரம்பலூர் அருகே திமுக வேட்பாளரின் கணவருக்கு கத்திக்குத்து: தப்பிய அதிமுக பிரமுகருக்கு போலீஸ் வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புது வேட்டக்குடி கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண்: 18ல் திமுக சார்பில் போட்டியிடும் அதே ஊரை சேர்ந்த பட்டு ச்செல்வி என்பவரின் கணவர் ராஜேந்திரன்(57), நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில், புது வேட்டக்குடி கடைவீதியில் இருந்து தனது வீடு நோக்கி சென்ற போது அதே ஊரை சேர்ந்த அதிமுக பிரமுகரான ராமலிங்கம் மகன் முருகேசன்(45), என்பவர் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இந்த திடீர் தாக்குதலில் கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜேந்திரன்உறவினர் உள்ளிட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர் போலீசாரின் விசாரணையில் தேர்தல் முன்விரோதம் காரணமாகவே இந்த கத்திகுத்து சம்பவம் நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தப்பிச் சென்று தலைமறைவான முருகேசனை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
திமுக வேட்பாளரின் கணவர் கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!