DMK chief M. Karunanidhi, the DMK and allies held a silent march in tribute at Perambalur
பெரம்பலூரில் இன்று காலை திமுக மற்றும் தோழமை கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தி பின்னர் அஞ்சலி செலுத்தினர்.
திமுக மற்றும் தோழமை கட்சிகளான தி.க, கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம், பெரம்பலூர் விளாமுத்தூர் பிரிவு சாலை அருகே இருந்து புறப்பட்டது, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக மாவட்ட திமுக கட்சி அலுவலகம் அடைந்தனர். அங்கு அலங்கரிப்பட்டு வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். முன்னதாக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளன பெண் தொண்டர்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். அமைதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது வழி தவறி வந்த ஆம்புலன்சிற்கு தொண்டர்கள் எவ்வித இடையூறும் செய்யாமல் அவர்களாகவே முன்வந்து வழிவிட்டு விரைவாக செல்ல அனுமதித்தனர்.