Farmer’s death in the field of medicine: poisoning through the sore in the body.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜா(35), இவர் விவசாயம் செய்து வருகிறார் தனது வயலுக்கு மருந்து அடிப்பதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தனது பூச்சி மருந்து அடித்துள்ளார் அவரது காலில் சிறு சிறு காயங்கள் உள்ளது

அப்போது செல்வம் தனது வயலில் மருந்து அடித்துக் கொண்டிக்கும் போது காலில் இருந்த புண் மீது பூச்சு மருந்து பட்டுள்ளது. இதனால் அவரது உடலில் விஷம் ஏறியதால் வயலிலேயே மயங்கி விழுந்துள்ளார், அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்

இச்சம்பவம் குறித்து ராஜாவின் மனைவி குன்னம் போலீசில் புகார் அளித்தார் புகாரை ஏற்று குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!