For cleaning staff, Rs. 1 lakh worth of gloves and relief items were donated by the former Home Guard Regional Commander, Perambalur

பெரம்பலூரில் நகராட்சியை சேர்ந்த 200 துப்புறவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கொரோனா காலங்களில் முன்களப் பணியாளர்களான இவர்கள் ஊரடங்கால் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஊர்காவல்படை முன்னாள் மண்டலத் தளபதியும் சமூக ஆர்வலருமான ராம்குமார், 1 லட்ச ரூபாய் மதிப்பில் 200 நபர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் கையுறைகளை இலவசமாக வழங்கினார். மேலும் அவர் பாதுகாப்பாக பணிபுரியுமாறு கேட்டுக்கொண்ட அவர்,வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். பேரிடர் காலத்தில் பணம் வைத்திருப்பவர்கள் மனமுவந்து துப்புறவு பணியாளர்களுக்கு உதவுவது சமூக கடமை என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!