Former Chief Minister J. Jayalalitha’s Memorial Day: AIADMK pays tribute in Perambalur!
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆயிரக்ககணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள், பேரூர், நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 7வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயிற்பகுதியில் திரண்டனர். அங்கு, அலங்கரிக்கப்ட்ட முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், முன்னாள் எம்.பி சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன் (ஆலத்தூர்), என்.சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), செல்வக்குமார் (பெரம்பலூர்), நகர செயலாளர் ராஜபூபதி மற்றும் மகளிர் அணியினர், தொழிலாளர் அணியினர், கூட்டுறவு சங்க தலைவர்கள், சிறுபான்மை பிரிவு, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, கலை இலக்கிய பிரிவு, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் குரும்பாபாளையம் நகராஜன், வழக்கறிஞர் அணி , உள்ளிட்ட பேரூர், நகர பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட கட்சியின் பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு, பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், வழிபோக்கர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.