free cardiovascular test on behalf of The new generation of Perambalur Rotary Society
பெரம்பலூர் புதிய தலைமுறை ரோட்டரி சங்கம் சார்பில் கட்டணமில்லா இருதய பரிசோதனை முகாம் திருச்சி அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முகாமை தொடங்கி வைத்தார். ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வரதராஜன், முன்னிலை வகித்தார். திருச்சி அப்பல்லோ மருத்துவமனை நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். இம்முகாமிற்கான ஏற்பாட்டினை புதிய தலைமுறை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஏ.சிங்காரம், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் ஆனந்தன், திட்டத் தலைவர் ரெங்கராஜ் திட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இம்முகாமில், 322 பேர் கலந்து கொண்டு இருதய பரிசோதனை செய்து கொண்டனர். 53 நபர்கள் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் கோட்டாசியர் கதிரேசன், வட்டாசியர் பாலக்கிருஷ்ணன், மருத்துவர் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.