Grinding work started at Perambalur sugar mill

பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள சர்க்கரை ஆலையின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரவைத் துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலரும், தலைமை நிர்வாகியுமான ரேவதி ரவை எந்திரத்திற்குள் கரும்பை செலுத்தி அரவையை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2017-2018 அரவைப் பருவத்திற்கு 6,956 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு அரவைப் பருவத்திற்கு 1,60,000 டன்கள் கரும்பு அரவைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1,40,000 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பபட்டுள்ளது,

அப்போது ஆலை நிர்வாக ஊழியர்கள், தொழிலாளர்கள், வருவாய் துறையினர் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!